10/27/2010

கருங்கல்லை போன்றவன் நான் கற்பூரம் ஆகிவிட்டேன்.

நம்ம பசங்க எல்லாம் கிட்டத்தட்ட pass out ஆனா நிலைமைல வேலை தேடும் படலத்தில் மும்முரமாக ஈடுபடும் வேளையில்..சிலர் நல்ல வேலைகள் கிடைச்சு செட்டில் ஆகிடாங்க, அது அடுத்த பதிவில் வரும், இம்முறை ஒரு அதிசய நிகழ்வு பற்றிய உண்மை கதை,

நேற்றைய தினம் வினோத் வழமை போல் வேலை முடிந்து அழகான பெண்களை அங்கும் இங்கும் தேடி அலைந்து இறுதியாக BMICH இல் முதலீட்டு தின கண்காட்சி (investment day டிலீப் போன்ற தமிழ் விளங்காதவரகளுக்காக)  நடப்பதை அறிந்த வினோத், கடந்த வெள்ளிகிழமை பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து எடுத்த இரண்டு ரூபாவை முதலீடு செய்யும் ஒரு நல்ல நோக்கத்துடன் உள்ளே சென்றான்...உள்ளே போன வினோத்  சிரேஷ்டர்கள் சிலரை முதலீட்டு ஆலோசகர்களாக கண்டான்.
அதிலும் குறிப்பாக சிவா அண்ணாவை பார்த்தபோது அவர் முற்று முழுதாக தமிழை மறந்து இங்கிலீஷ்காரனாக மாறி இருபது வினோத்துக்கு தெரிய வந்தது,இது பற்றி சிவா அண்ணாவின் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு நண்பரிடம் விசாரித்த போது சந்திரமுகி படம் போல் ஒரு கதை கூறினான் அதாவது 2005/2006 பகுதியில் பீட்டர் என்று ஒரு வெள்ளைக்காரன் சிவா அண்ணாவின் வீட்டுக்கு அருகாமையில் இருந்ததாகவும், தான் கருப்பாக இருந்ததால் அந்த வெள்ளைகாரனாக மாறவேண்டும் என்றும் ஆசை கொண்ட சிவா அண்ணா பீட்டர் போல் ஆங்கிலத்தில் பீட்டர்விட்டுதிரிந்தார் கடந்த வருடம் பீட்டர் இறந்த பின் அந்த பீட்டர் தான் தான் என எண்ணி தற்பொழுது முழுமையாக பீட்டராக மாறி இருக்கும் சிவா அண்ணாவின் கதை இது....இது ஒரு புறம் இருக்க, இரண்டு ரூபாவுடன் BMICH வலம் வந்த   வினோத் பெரும் அதிர்ச்சி  ஒன்றை சந்திக்க நேர்ந்தது,
குறிப்பிட ஒரு இடத்தில ஏழு அடி உயரமுள்ள ஒரு நபர் பங்கு சந்தையில் தங்களுக்கூடாக முதலீடு செய்வது தொடர்பாக தாறுமாறாக ஆலோசனை வழங்கி கொண்டிருப்பதை பார்த்த வினோத் தனது  இரண்டு ரூபாவை எடுத்துக்கொண்டு அங்கெ சென்றான், அங்கு நிறத்து வேறுயாருமல்ல நம்ம கார்த்தி தான், ஒரு காலத்தில் பாட்ஷா போல் ஊரை கலக்கிய கார்த்தி இன்று மாணிக்கம் போல் மாறி இருப்பதாய் கண்டு வினோத்துக்கு அஞ்சும் கேட்டு அறிவும் கெட்டது..வெட்டு குத்துகளுக்கு ஆலோசனை வழங்கிய கார்த்தி இன்று முதலீட்டு ஆலோசகராக இருக்கும் விடயம் எங்களுக்கு தெரிந்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த பதிவு எழுதப்பட்டது மேலும் இதை பார்த்து மட்டக்குளி தாதாவான அசோக் திருந்த வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு..நண்பன் கார்த்தி இதை பார்த்து கடுப்பாகும் பட்சத்தில் நேரடியாக வினோத்தின் வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுகொள்கிறோம்.(அப்பாடி.....) மேலும் வினோத் தந்த இரண்டு படங்களையும் இங்கு கிளுகிளுப்பாக இனைகிறோம்..



3/07/2010

நித்தியானந்தா விவகாரத்துடன் டிரோசனுகும் காந்தரூபனுகும் நேரடி தொடர்பு..கோபியின் புலனாய்வு தகவல்..அதிரடி ரிப்போர்ட்

நித்தியானந்தா விவகாரத்துடன் டிரோசனுகும் காந்தரூபனுகும் நேரடி தொடர்பு..கோபியின் புலனாய்வு தகவல்..அதிரடி ரிப்போர்ட்

நான் எனது பொழுது போக்குக்கு தான் இந்த ப்ளாக் எழுதுகிறேன் சமூகத்தை திருத்த எத்தனையோ எழுத்தாளர்கள் இருகின்றார்கள். எமது பிரதான நோக்கம் அனைவரையும் வதைப்பதே...
இன்று முதல், வேலை தேடி நாக்கை தொங்க போட்டுகொண்டு அலையும் வினோத்துக்கு எனக்குள் ஒருவன் தளம் புகைப்படங்களை எடிட் பண்ணும் வேலையை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றது...
 

அனைத்து இளைய உள்ளங்களையும் கிளுகிளுப்படைய வைத்த நித்தியானந்தாவின் காணொளி மர்மம் தொடர்பாக கோபி எமக்கு அளித்த புலனாய்வு தகவலின் தொகுப்பு வருமாறு....
ஏற்கனவே நிதியானந்தாவை முத்தியானந்தா  என நம்பியவர்கள் இன்று அவர் ஒரு கலுசரையானந்தா என முடிவெடுத்துள்ளனர்..இதற்கான காரணம் தான் என்ன? நித்தியானந்தா தனது ஆத்மீக உரைகளை இணையதளங்களில் போட்டு இருந்தார் எனினும் அதனை பார்பவர்கள் மிக சொற்ப அளிவினராகவே இருந்து வந்தனர் இதனால் குழப்பம் அடைந்த நித்தி colombo university யில் அப்படியான சமாச்சரங்களில் அதிக தேர்ச்சி கொண்டவனும் பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழுடன் Aசான்றிதழும் இவனுக்கு வழங்கியிருந்தார்கள் double meaning  மன்னனும் ஆனா டிரோ வுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது கவலையை தெரிவிக்க, டிரோ தனக்கே உரிய பாணியில் அப்படி இப்படியான படங்களை நீங்களே நடித்து படம் பிடித்து போட்டால் உங்கள் புகழ் ஒரு நொடியில் உலகெல்லாம் பரவும் எனச் சொல்ல நிதியனந்தாவோ தான் அப்டியான விசயங்களுக்கு புதுசு  எனக் கூற, டிரோ தான் மதுவின்  உதவியுடன் சில லேகியங்களையும் மாத்திரைகளையும் அனுப்புவதாக கூறினான்.  
இந்த வலை பின்னலுக்குள் இணைந்து கொண்ட அடுத்த நபர் காந்தா, கருணாநிதி சிறுநீர் கழித்தாலும் அதனை facebook statusஆக போடும் இவன் கருணாநிதியை யாரும் தவறாக பேசினால் ரூம் போட்டு அழுவான் அந்த அளவு லவ், இவன் கொஞ்சம் அப்படியான ஆள் தான்...இப்படியான சந்தர்ப்பத்தில் கருணாநிதியை அடிகடி தவறாக பேசி வந்த நித்தியானந்தாவுக்கு டிரோ அனுப்ப இருந்த லேகியங்களை தான் கொண்டு பொய் கொடுபதாக கூறி காந்தா அவற்றை வாங்கி எடுத்து கொண்டு ,சிலவற்றை தானும் ருசி பாக்கிறான், இந்தியா புறப்படும் காந்தா கருணாநிதியை அவரது ஐந்தாவது மனைவியின் வீட்டில் சந்தித்து முத்தமிட்டு மகிழ்கின்றார் இதன் பின் தான் வந்த நோக்கத்தை கூறுகின்றான் காந்தா,. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய கருணாநிதி ஒரு பழைய  camera மற்றும் ஒரு விளக்கையும் காந்தாவிடம் கொடுத்து விடுகின்றார்.ஆனாலும் சரியான தருணம் பார்த்து காத்து இருக்கின்றான் காந்தா. 
இதற்கிடையில் டிரோ அனுப்பிய லேகியங்கள் கிடைக்காத நிலையில் கடுப்பகிய நித்தியானந்தா டிரோவை திட்ட, டிரோ இந்தியா செல்லத் தயார் ஆகின்றான். ஏற்கனவே லியோனியின் சின்னவீடுடன் இலங்கையில் நல்ல புனிதமான நட்பை  கொண்ட டிரோ அவளின் உதவியுடன் ரஞ்சிதாவின் phone  number பெறுகின்றான். இந்தியா செல்லத் தயார் ஆனா டிரோ ஏற்கனவே இந்தியா போய் 5 நாளில் வெறும் 3000ரூபாய் செலவழித்த வினோத்திடம் அறிவுரை கேட்கிறான், வினோத் தனது டயரியில் இருக்கும் கைஎந்திபவங்களின் விலாசத்தையும், கோவில்களின் அன்னதான date டயும் கொடுக்கிறான், நடைபாதையில் இரவில் துங்குவதட்கு இடம் பிடிக்கும் technique கையும் சொல்லி அனுப்புகிறான்.


ஏற்கனவே யாழ் உணவகத்தில் காஞ்சுபோன பிட்டும் பருப்பும் சாப்பிட்டு சேர்த்த 20000 ரூபாவை மது ஆட்டையை போட்ட நிலையில், டிரோ புது ஆடைகள் இல்லாததால் university of colombo என்று அடிச்ச அதே நீல T-shirtடுடன்  Airport போக தயார் ஆகிறான். திடீர் என்று வினோத் call பண்னுகின்றான், போகும் போது Three quater போட்டு போகுமாறு கூறுகின்றான், அதை கேட்ட டிரோ அதிர்ச்சியாகி வினோத்திடம் ஒரு Three quater கடனாக கேட்க, வினோத்தோ தன்னிடம் ஐந்து வருடமாக use பண்ணிய அந்த பச்சை கலர் Three quater தான் இருபதாகவும் அதுவும் நடுவில் பெரிதாக கிழிந்து விட்டதாகவும் கூறினான், இதை கேட்டு கடுப்பான டிரோ தந்து வழக்கமான வேலையை தொடங்கினான், ஒரு பழைய jeans சை தேடி எடுத்து Three quater ராக மாத்தும் முயற்சியில் ஈடுபட்டான், கெட்டகாலம் ஒருகாலை தொடைக்கு மேல் வெட்டி விட்டான்,இனி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அந்த விசித்திரமான ஆடையுடன் புறப்பட்டான், எனினும் சர்வதேச சட்டத்துக்கு முரணாக jeansசை Three quaterராக மாற்றிய குற்றச்சாட்டில் இவனை மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பினர...


டிரோ காந்தாவிடம் call பண்ணி பல கெட்ட வார்த்தைகளை உதிர்கிறான், கடந்த மூன்று வருடத்துக்கு முதல் தான் கெட்ட வார்த்தை பேச ஆரம்பித்த காந்தா
அதனை எதிர்கொண்டு பேச முடியாமல், தான் பாடமாக்கிய ஆங்கில presentation ஒன்றை உரத்த தொனியில் விடாமல் சொல்ல தொடங்க டிரோ  cut பண்னுகின்றான், ரஞ்சிதாவுக்கு phone எடுக்கும் டிரோ காந்தாவை சந்திக்குமாறு கூறுகின்றான், ரஞ்சிதாவும் காந்தாவை  சந்தித்து மாத்திரைகள் மற்றும் லேகியங்களை வாங்கி கொண்டு நித்தியானந்தாவை சந்தித்து வேலையை தொடங்குகிறார், மகிழ்ச்சியடைந்த நித்தியானந்தா டிரோ விடம் தொடர்பு கொண்டு நன்றி சொல்கிறார், இந்த விசங்களை vedio எடுக்குமாறு டிரோ அறிவுரை வழங்குகிறான், இந்த vedio வை விற்று தான் விட்ட 20000 ரூபாவை அடைய கனவு காண்கிறான் டிரோ...நித்தியானந்தாவும் காட்சிகளை படம் பிடிக்க இரண்டாவது நாள் படப்பிடிப்பின் பொது ரகசியமாய் அங்கு நுழைந்த காந்தா விளக்கு அணைய camera  திருடி கொண்டு ஓடி சென்று கருணாநிதியுடன் சேர்ந்து பல முறை பார்த்து மகிழ்கின்றான்




பினர் இதனை suntv கு விக்கின்றான் காந்தா. suntv அந்த நீல படத்தை பச்சையாக ஒளிபரப்ப..கருணாநிதி அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனை தனது ஆக facebook status போட்டிருகின்றன் காந்தா...... 


டிரோ ஆழ்த்த சோகத்தில் இருக்கின்றான்.




 


1/12/2010

கோபிக்கு இன்று கொண்டாட்டம்!!!!!

யார் இந்த கோபிதாஸ்?1986/1987 காலப் பகுதியில் யாழ்ப்பாண மக்கள், ஒரு சிறந்த அறிவுரையாளன் அரசியல் வாதி இல்லை என மனம் வேதனை பட்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்,கடவுள் மனம் இரங்கி,13/01/1987 அன்று யோகேஸ்வரன் தம்பதியினருக்கு ஒரு அதிசய குழந்தை பிறக்கும் என கூறி மறைந்தார், அந்த நாளும் வந்தது மக்கள் அனைவரும் அந்த அதிசய குழந்தையை காண திரண்டு இருந்தனர்,பலத்த இடி மின்னல் அடிக்க  குழந்தையும் பிறந்தது, மக்கள் அதிசய குழந்தையை ஆவலாக பார்க்க, என்ன அதிசயம் பிறந்த குழந்தை மிக சரளமாக பேசியது, திடீர் என்று இந்தியாவை குழந்தை கெட்ட வார்த்தையில் திட்ட தொடங்கியது அனைவரும் காதை பொத்தி கொண்டனர் குழந்தை விடுவதாக இல்லை பல அரசியல் தலைவர்களையும் சரமாரியாக திட்டி தீர்த்து இந்த திட்டலை கேட்டு தங்க முடியாமல் பலர் நாலா  பக்கமும் சிதறி ஓடினர்.கோவம் வந்தால் தாக்கும் குணமுடை இந்த குழந்தைக்கு பெற்றோர் கோபிதாஸ் என திரு நாமம் இட்டனர். இந்த குழந்தை படிப்படியாக வளர மக்கள் அனைவரும் சேர்ந்து கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். 


கடந்த மூன்று வருட ஆராய்சியின் முடிவில் இவனை பற்றி  திடுக்கிடும் பல உண்மைகள் வெளி வந்தன, கம்பஸ் வந்த முதல் நாள் தமிழ் பெடியங்கள் யாரையாவது தேடி பிடிப்பம் என நான் அலைந்து கொண்டிருந்த சமயம் ஒரு மீசை வைத்த சிங்கம் CIMA  பற்றி உறுமிக்கொண்டு இருந்தது அவன் வேறு யாரும் அல்ல கோபி தான்..அவனை பார்த்துக் கொண்டு இருந்த நான் திடீர் என்று ஒருவனால் தாக்கப் பட்டேன், அவன் வேறு யாருமல்ல மட்டக்குளி தாதா அசோக், ஓங்கி எனது தோளில் அடித்த படி, "என்ன கதை" என்று கேட்டான் நான் செத்த கதை என்று கூறி கொண்டு தோளில் ஏற்பட்ட வலியால் கடுபானேன்,தான் மட்டக்குளியில் ஒரு பெரியா தாதா என தன்னை அறிமுக படுதிகொண்ட அசோக்கை பார்த்து நான் பீதி அடைந்து கோபியிடம் போய் இதை கூற அவன் சிரித்த படி நானும் ஒரு பயங்கரமான தாதா என கூறினான் பல தாதாகள் இருக்கும் Batch ல நானும் ஒருவன் எண்டு கவலை பட கோபி என்னை தனியே அழைத்து தனது வாழ்க்கை வரலாரை கூறினான். படிக்கும் காலத்தில் தான் படிக்காமல் ஒரு தாதா வாழ்க்கை வாழ்த்தையும் பிறகு ஒரு சின்ன பெடியனுக்கு அடிக்கும் போது அவன் கடுப்பாகி  " இவளவு அடிகிறியே உன்னால படிக்க முடியுமா"என கேட்க தாதா பதவியை துறந்ததாகவும் கூறினான் அதன் பின் முழுமையாக படித்து படிப்பில் தான் செய்த சாதனைகளை கூறினான் ஒருவனின் கண்ணை பார்த்து அவனை பற்றி கூறும் வல்லமை தனக்கு இருபதாகவும் கூறிச் சென்றான், எனக்கு ஒரு பாட்ஷா படம் பார்த்தது போல் இருந்தது மயக்க நிலையில் இருந்த என்னை கலா தண்ணீர் தெளித்து கூட்டிச் சென்றான். 

பிற்காலத்தில் சிறந்த நண்பனான கோபி பல வழிகளில் எனக்கு உதவியாக இருந்தான் அத்துடன் படிப்பில் எட்ட முடியாத சாதனைகளை படைத்தான், ரகர் விளையாடி பல தங்க கொப்பைகை வென்றான் இப்பொது பெட்மிடன் வேறு விளயாடுகிறான், அஜந்தன் அண்ணாவின் கைக்கு வைத்தியம் செய்தது இவனின் பெரிய சாதனை, சிறந்த ஒரு தமிழ் பற்றாளன், கம்பஸ் தமிழ் சங்க தலைவர் இப்படி கூறிக் கொண்டே போகலாம், கோபிக்கு ஒபாமா வுடன் நேரடித் தொடர்பும் உண்டு Barack Obama Fan என்ற Facebook Group ல இவன் ஒரு மெம்பராக இருப்பதே இதற்கு சான்று,,இப்படியான சாதனைகளை தொடர்ந்து செய்ய எங்களுடைய வாழ்த்துகளை இந்த நல்ல நாளில் தெரிவிப்பதில் பேரானந்தம் அடைகிறோம்..கோபிதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

1/03/2010

அன்பின் ஆவாகனம்!!!

இந்த பதிவு 30/12/2009 இரவு எங்கட பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றுகூடல் பற்றிய விசயங்களைத் தாங்கி வருகின்றது.....7.20pm போல் மண்டபத்தை அடைந்த நான் பல பழைய முகங்களை பார்க்க கூடியதாக இருந்தது ..அதே தொப்பைகளுடன் தவா அண்ணா பஜார் ஒரு புறத்திலும் மறு புறத்தில்,passout ஆகி கொஞ்ச காலத்திலே Aunty மார் போல் ஆகிவிட்ட கவிதா அக்கா மற்றும் பபிதா அக்கா கூட்டணி...
மைக்கை பிடித்து பயங்கரமாக மொக்கை போட்டு கொண்டு இருந்த கிஷாந் ஒருமாதிரியாக பாடல் பாடுவதற்கு இருவரை அழைத்தான்.
சும்மா சொல்ல கூடாது ஒரு கலக்கு கலக்கிட்டான் நம்ம கிட்டார் தம்பி, சும்மா இருந்த பாலாஜி பாடலுக்கு நடுவில் பலூன் விற்பவன் போல் தலையில் ஏதோ கட்டி கொண்டு ஒரு வித்தியாசமான வியாதி வந்தவன் போல் ஓடித் திரிந்தது மொக்கையின் உச்சம்.
இதுக்கு பிறகு கலாச்சார பேப்பர்  நடனப் போட்டி இடம் பெற இருந்தது, இந்த பேப்பர் டான்ஸ் போட்டிக்கு நடுவர்களாக, ஏற்கனவே பல பேப்பர் டான்ஸ் போட்டிகளில் கலந்து கொண்டு பல தங்க கோப்பைகளை வென்ற ராகுலன் அண்ணாவும், விவியன் ட்ரெடெர்ஸ் நிறுவனத்தில் பேப்பர் மடிப்பதில் அதிக அனுபவத்தை கொண்ட பபிதா அக்காவும், exam க்கு பிட் பேப்பர் தயாரிப்பதில் கைதேர்ந்தவருமான சதீஸ்சும் நடுவர்களாக அழைக்கப் பட்டனர்..

போட்டியாளர்களாக பலர் அழைக்கப் பட்டாலும் சுதா அண்ணா, அலெக்ஸ் அண்ணா கூட்டணி, டிரோசன், ராகேஷ் அண்ணா கூட்டணி, மனோச், பிரபு அண்ணா ஆகியோர் முக்கியம் பெற்றனர்.போட்டியை ஆரம்பிப்பதற்கு முன் நடுவர்களை தனியே சந்தித்த சுதா அண்ணா ஒரு கோரிக்கையை முன் வைத்தார் அதாவது தான் நின்று ஆடப்ப் போகும் பேப்பரில் மகிந்தவின் படம் இருக்க வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை..இந்த கோரிக்கையால் குழப்பம் அடைந்த ராகுலன் அண்ணா, பேப்பர் பொடியன் தவா அண்ணாவிடம் சென்று ஆலோசனை கேட்க, தவா அண்ணா, மகிந்தவின் படம் இல்லாமல் இல்லாமல் எந்த பேப்பரும் இருக்காது அதனால் நீர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு போட்டியை தொடங்கும் என ராகுலன் அண்ணாவிடம் தெரிவித்தார்...
DJ சங்கு ஊத போட்டி ஆரம்பமானது, ராகுலன் அண்ணா தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்,பேப்பர் சிறிது சிறிதாக மடிபட டிரோவும் ராகேஷ் அண்ணாவும் நேற்று ராத்திரி எம்மா என்ற பாடலை நினைவு படுத்தும் விதமாக ஆட தொடங்கினர்..
கடந்த சில காலமாக gym போய் உடம்பை கல்லு போல் ஆக்கி வைத்திருக்கும் சுதா அண்ணா, அலெக்ஸ் அண்ணா வை ஓவரு விதமாக தூக்கி பார்வையாளர்களை பரவசப் படுத்தினார். இதன் காரணமாக எழுந்த புகையால் சுதா அண்ணா அதிக களைப்புகுளாகினார், ஆனாலும் அலெக்ஸ் அண்ணா இறங்குவதாக இல்ல, இறுதியில் சுதா அண்ணா போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.
இறுதிவரை போராடி போட்டியில் மனோச் பிரபு அண்ணா கூட்டணி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து அடுத்த fungame மாகா beat ஏற்றது போல் step மாத்தி நடனமாடும் போட்டி இடம் பெற்றது இதற்கு நடுவராக பல நடனங்களுக்கு ஒரே step ஆடிய கவிதா அக்கா அழைக்கப் பட்டார்,
ராஜ்கிரண் போல் எலும்பு கடிக்க கூடிய தவா அண்ணா தனக்கு எலும்பு கடிக்கும் போட்டி வைத்தால் தான் இந்த போட்டியில் பங்கு பெறுவேன் என அடம்பிடித்தார் அவரது வேண்டுகோள் ஏற்கப் பட்டு பிறகு எலும்பு கடிக்கு போட்டி அவருக்கு தனியே நடத்தப்பட்டது. இரு போட்டியிலும் அவரே வெற்றி பெற்றார்...
இதன் பின் அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்த உணவு, மட்டக்குளியில் தனது தாதா தொழிலுக்கு பயன் படுத்தும் vanல் அசோக்கால் தனது அடியாட்களின் உதவியுடன் உணவு கொண்டு வரப்பட்டது, கோழி இறைச்சியை பாதுகாக்கும் பொறுப்பு அராவால் மேற்கொள்ளப் பட்டது..விருந்து இனிதே துவங்க,
காணாமல் போனார் சிலர் அவர் வேறு யாரும் அல்ல பபிதா அக்காவும் கவிதா அக்காவும் தான், இவர்களை காணவில்லை என குழப்பம் அடைந்த சிவா அண்ணா, தேடிய போது இருவரும் facebook  இல் போடுவதற்காக போட்டோகளை எடுத்து தள்ளி கொண்டு இருந்தனர்
இவர்களுடன் இணைந்த சிவா அண்ணா தானும் ஒரு சில படங்களை எடுத்தார்..ஏற்கனவே நத்தார் தொப்பியுடன் போட்டு பிரபலமான சிவா அண்ணா பொங்கல் படம் ஒன்றை எடுக்க அன்று முயற்சி செய்தார்.
சாப்பிட்டு முடிந்த கையோடு பெண்களை வீடுகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இடம் பெற்றது இதற்கு மது தலைமை தாங்கினார் மதுவுடன் குமரேஷ் மற்றும் அரா ஆகியோர் இணைந்து கொண்டனர்..கொட்டஹெனா பெண்களை முதலில் மது ஒரு வானில் ஏற்றினான் அந்த வானில் நான் போயிடு வர ஆசைப் பட்டேன் அதற்குள் சிவச்செந்துரன் அண்ணா நான் தான் போவன் என அடம் பிடிக்க நான் ஒதுங்க்கிக் கொண்டேன்.


மிஞ்சி இருந்த பெண்களை வீடுகளுக்கு அனுபுவதற்கு மதுவும் அராவும் குழம்பிக் கொண்டு இருக்க இடையில் வந்த சிவா அண்ணா தான் வெள்ளவத்த பெண்களுக்கு பாதுகாப்பாக செல்வதற்கு முன் பதிவு செய்வதாக கூறினார்..ஒருமாதிரியாக எலோரையும் பாசல் கட்டிய பின்னர் மது ஓய்வுக்கு வந்தான்..

hall manager கிழவன் தனக்கு சாப்பாடு தரவில்லை என்று அராவை கூப்பிட்டு கெட்ட வார்த்தயில் திட்ட, அரா சிரித்துக்கொண்டு நின்றான் இங்கு வந்த கோபி, எவளவு திட்டினாலும் வாங்கிறியே நீ ரொம்ப நல்லவன்டா  என்றான்..
இதன் பின் கோபியை யாரோ ஆடத் தெரியாதவன் என்று கூற, கடுப்பான கோபி விடாமல் இரண்டுமணி நேரம் ஒரு கலக்கல் நடனம் ஆடி முடித்தான்...

நீண்ட நேர கொண்டாட்டத்தின் பின் இனிதே நிறைவு பெற்றது அன்பின் ஆவாகனம். சிறப்பாக ஒழுங்கு செய்த அனைவர்க்கும் நன்றி.


1/01/2010

Marketing தந்தை மகிந்த .

நான் பார்த்த சிறந்த Marketer  அதாவது சந்தைபடுதுபவர்  மஹிந்த தான்..இவர் போட்டோ எடுத்த காசை மிச்ச படுத்தி இருந்தால் விண்வெளிக்கு ரொக்கட் அனுப்பி இருக்கலாம்..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தன்னை மக்கள் மத்தியில் position பண்ணுவதற்காக அட்டகாசமான பல போஸ்களில் ஏராளமான படங்களை எடுத்து தள்ளி இருந்தார். முன்னால் நடிகர் என்பதால் இப்படியான போஸ்கள் குடுப்பது அவருக்கு பெரிய வேலை இல்லை.
வயதான கிழவிகளும், குழந்தைகளும் இவரைக் கண்டால் பயந்து ஓடும் அளவிற்கு அவர்களை இவர் விடுவதில்லை..
உச்சகட்ட கொடுமையாக ஆயிரம் ரூபா தாளில் ஜேசு நாதர் ஆசீர்வாதம் வழங்குவது போல் ஓர் போட்டோ போட்டிருந்தார் உலகிலே முதல் முறையாக இப்படியான வரலாற்று  சாதனையை செய்த சிங்கம் இவர் தான்.
கொழும்பு நகரில் எங்கு திரும்பினாலும் தனது திருமுகத்தையே மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக மலசலகூட சிவர்களைக் கூட இவர் விட்டு வைப்பதில்லை..தன் திரு முகத்தை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து எங்கும் ஓட்டுவது தான் மஹிந்த சிந்தனையின் சாராம்சம்,
புகைப்படங்களில் தானும் தம்பியும் கட்டி அணைத்து முத்தமிடும் ஒரு கிளுகிளுப்பான படமும் முக்கியம் பெறுகின்றது..

இதன் விளைவாக தற்பொழுது கொழும்பு வாழ் மக்கள் இரவு வேளைகளில் சிவப்பு துண்டுடன் பெரிய மீசை வைத்த உருவம் கனவில் வந்து பயமுறுத்துவதாக வைத்தியசாலை சென்று தெரிவித்துள்ளனர், இது மகி போஸ்டர் போமியா எனும் பயங்கர நோய் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதற்கு மேலதிகமாக தனது சந்தைபடுத்தல் திறமையை காட்டுவதற்காக தனது காந்தர்வ குரலால் வீடு வீடாக தொலைபேசியில் பிச்சை எடுக்கிறாராம், பிறகு புது வருடத்திற்கு அனைவர்க்கும் SMS வாழ்த்து,  இதையும் தாண்டி FACEBOOK மற்றும் YOUTUBEகளில் முன்முருவல் பூத்த சிரிப்புடன் விளம்பரங்கள்..இவளவு காசும் எங்க(எங்கள்ட) இருந்து தான் வருதோ.

12/31/2009

தொலைந்தது 2009





2009 பாரிய அளவிலே அழிவுகளை ஏற்படுத்திய வருடம் அதிலும் குறிப்பாக தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு வருடம் என்றால் அது 2009 தான்...பல்வேறு விதங்களில் உயிர் இழப்புகளும் அழிவுகளும் கண்ணனுக்கு முன் அரங்கேறிய காலம்...2009 நமக்கு இழைத்த துன்பங்களே அதிகம் அதனால் தான் தொலைந்த்தது 2009 என்று தலைப்பிட்டேன்..


பல வித்தியாசமான அனுபவங்களை தாங்கி வந்த ஒரு குழப்ப கரமான ஆண்டு என்று  கூட கூறலாம்..எதோ ஒரு வகையில் யுத்தம் முடிவுக்கு வந்தது என்று அறிவித்தாலும் கூட இந்த ஆண்டில் யுத்த தாண்டவம் பாரிய அளவில் அரங்கேறி இருந்த்தது..

2009 எமக்கு விட்டு சென்ற பல கேள்விகளுக்கு விடை இந்த புது வருடத்தில் தான் கிடைக்க போகின்றது அதிலும் முக்கியமான கேள்வியாக  நான் கருதுவது.

சரத் பொன்சேகாவா மகிந்தவா அடுத்த ஜனாதிபதி?
இது தான் கடைசியாக 2009 எமக்கு விட்டு சென்ற முக்கியமான கேள்வி.. 

2009 எமக்கு அதிகளவான காயங்களைத் தந்து விட்டது, 2010 அந்த காயங்களுக்கு சரியான மருத்துவம் செய்யுமா பார்ப்போம்...

எனது வலைப்பதிவு நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..







12/23/2009

அட மூதேவி இது தேவையா..

வேட்டைக்காரனை புறக்கணிப்போம் என்று மூஞ்சி புத்தகத்தில் ஒரு குழு, என்ன கொடுமை.. அந்த குழு தொடங்கினதுக்கு போட்டிருக்காங்க ஒரு காரணம் ஆஹா நம்ம ஆக்கள் எங்கயோ போய்டாங்க...நான் விஜய் ரசிகன் அல்ல ஆனாலும் அந்த காரணத்தை பார்த்த போது கடுப்பின் உச்சத்துக்கு போயிட்டன், அதாவது குண்டு போட்டு அரை இலட்சம் மக்கள் இறப்பிற்கு காரணமாக இருந்த இராணுவத்தை புகழ்ந்து பாடிய இராஜ் வேட்டைக்காரன் பாடல்களுக்கு இசை உதவி செய்திருக்கின்றாராம் ஆகவே தமிழ் இனத்துக்கு விஜய் பெரிய துரோகம் செய்திடேராம்(ரூம் போட்டு ஜோசிபாங்கலோ) இந்த குழுவ தொடங்கின சிங்கம் லண்டன்ல இருக்கு என்பது தான் பெரிய காமெடி...
 தமிழன் எவளவு பெரிய துரோகம் எல்லாம் பாத்திட்டான், தமிழனுக்கு தமிழன் செய்த துரோகத்த விட இது ஒரு துரோகமா...லண்டன்ல இருக்கிற தம்பி உங்கட பொழுது போக்குக்கு தமிழர பிரச்சனைய பாவிச்சது போதும் இந்த அற்ப  விடயங்கள புறக்கணிச்சு என்னத்த காண போறீங்க..லண்டல அகதி அந்தஸ்து பெறுவதுக்கு யுத்தத்த கண்ணால காணாத பலரும் தாங்கள் யுத்தத்தால் பாதிகப்படவர்கள் என்று நாய் கடித்த காயத்தை குண்டடி பட்ட காயம் என்று கூறிய வரலாறுகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் முதலில் அவங்களை புறக்கனிங்கோ அதுக்கு பிறகு மற்றவர்களை புறக்கணிக்கலாம்.. புறக்கணிச்ச தம்பி, பாடல்களுக்கு இசை வழங்குவது இராஜ்சின் தொழில் என்பதை நீங்க கவனிக்க வேண்டும்,நடிப்பது விஜயின் தொழில் அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்...விஜய் யார்? அவரிடம் தமிழர் பிரச்சனைக்கு என்னத்தை எதிர் பார்க்க முடியும்..ஈழம் என்று ஒரு நாடு உருவானால் கூட வெளிநாட்டில் இருக்கும் பலர் இங்கு வரப் போவதில்லை இப்படியோ கதைச்சு காலத்தை ஓட்டுங்கோ(இது சகலருக்கும் பொருந்தாது)...

இப்படி பாக்க போனால் அரை இலட்சம் பேரை கொன்ற மஹிந்த அரசுக்கு கீழ் இருக்கும் இலவச வைத்தியசாலை பாடசாலை போன்றவற்றையும் லண்டன் தம்பி புறகணிக்க சொலுவார் போல இருக்கு, லண்டன் தம்பி, புறக்கணிப்பு என்பதை கேவல படுத்தாதீர்கள், முகாமில் இருந்த மக்கள் பசி என்று வந்தவுடன் இராணுவத்திடம் கையேந்தி நின்றார்கள் அதை தவறு என்று கூறுவீர்களா அல்லது புறக்கணிக்க சொல்லுவீரா...எதாவது பிரியோசனமா ஜோசீங்க,மஹிந்த அரசில் இருக்கும் தமிழ் அமைச்சர்களின் காலில் விழுந்து தங்கள் சிறையில் இருக்கும் பிள்ளைகளை விடுவிக்க எத்தனையோ பெற்றோர் தினமும் போகின்றனர் அவர்களை புறக்கணிக்க முடியுமா? பாதிக்க பட்டவர்கள் வலியின் உச்சத்தில் இருக்கிறார்கள் கொஞ்ச காலம் ஆவது அவர்கள் நிம்மதியாக  இருக்கட்டும்.நீங்கள் யாரையும் புறக்கணிக்க வேண்டாம் அப்படி புறக்கணிக்க விரும்பினால் இலங்கைக்கு வந்து புறக்கணியுங்கள்...சொடுக்கி இணைக்க http://www.facebook.com/group.php?gid=197350762271



12/15/2009

விசித்திர வினோத்துக்கு இன்று பிறந்த நாள்..

மகேஸ்வரன் வினோத் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம். இந்த நல்ல நாளில் யார் இந்த வினோத் இவன் பின்னணி என்ன?நான் இவனை முதல் முதலாக 09/10/2006 அன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன் சும்மா சொல்ல கூடாது மெல்லிய பெடியன் எண்டாலும் அட்டகாசமான ஸ்டைல், தலைக்கு ஜெல் வைத்து ஒரு விதமாக தான் நின்றான்,நானும் இவனோட கதைப்பம் எண்டு பல முறை try பண்ணியும் முதலாவது நாள் கதைக்க முடியேல..பிறகு உறவு பாலத்தில் தண்ட திறமையால அக்கா மாரின் விருப்பத்துக்குரிய தம்பியா மாறினான். வீனா போனவன் ஓவரு நாளும் சரியாய் காலைல உறவு பாலத்துக்கு வந்திருவான் இப்படி காலங்கள் போக charted ல அத்திவாரம் எண்டு தொடங்கினவன் மள மள எண்டு F1 வரையும் போய் சாதனை படைத்தான் எங்கட Batch  ல முதலாவது வேலைக்கு போனது இவன்தான்...படிப்பில் கொடி கட்டி பறந்த இவன் கடலை போடுவதிலும் குறைந்தவன் அல்ல, சில  சிங்கள பெட்டைகளுக்கு இவன் போட்ட கடலைகள் பிடித்து போய் அனே வினோத், அனே வினோத் எண்டு இவனோட கொஞ்ச காலம் திரிய அதுகளுக்கும் லவ் SET ஆக இவனுக்கு கடலை போட பெரிதா விருப்பம் இல்லாமல் போனது....Hindu union ல சேர்ந்து  பாடுபட்டு உழைத்தது இவனது பெரிய சாதனை, அணைத்து கலை நிகழ்ச்சிகளிலும் இவனது பெரும் பங்கு இருந்து வந்தது..இடையில் ஓரிரு தடவை நடனங்கள் வேறு ஆடி ஒரு மாபெரும் கொடுமை செய்தான். நான் போடும் மொக்கை நாடகங்களுக்கு பக்க பலமாக நின்று உழைப்பான் அதுகளுக்கு Animation  வேற செய்து வருவான்..எங்கட Batch IT king இவன்தான் பல நல்ல குணங்கள் இருந்தாலும் பஸ் ல ஏறினா ஒரு 10 ரூபாய குடுத்து தனக்கு மட்டும் டிக்கெட் எடுப்பான்.5 ரூபாய் ஜெல் பக்கெட் வாங்கி அதை 10 நாள் use பண்ற  technique இவண்ட தான் படிகொனும். பெரிய கொடுமை இவன் 50rs reload  பண்ணி 2மாதம் phone பாவிப்பான், Dialog sim use பண்ணி ஒரு வருசத்தில வெறும் 5 star points எடுத்த ஒரே ஆள் இவன்தான் ,உடுப்பு எடுக்க போனா சும்மாவாவது ஒரு பத்து கடை ஏறி இறங்குவான்...இவனை கஞ்சன் எண்டு ஒதுக்கி விட முடியாது, இன்று நான் இவளவு அழகா Guitar வாசிக்கிறன் அதுக்கு காரணம், வினோத் எனக்கு தந்த Guitar தான். இவனுக்கு பிடிக்காதது தமிழன் வைக்கும் மீசை, பிடித்தது செட்டிநாட்டு தோசை.வெள்ளிகிழமைகளில் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலில் வெளியில் கழட்டி விட்டு வந்த செருப்பு துலைய கூடாது எண்டு கும்பிடுவான்.பஸ் காசை சேமிக்க கோவில்ல இருந்து வீடு வரை நடந்து போவான்.எப்படியோ யாருக்கும் சொல்லாமல் ரகசியமா பல plan கள் போடுவான்...மொத்தத்தில் வினோத், மகேஸ்வரனால் இந்த உலகத்துக்கு தரப்பட்ட ஒரு அரிய சொத்து. அவனது சாதனைகள் தொடர  வாழ்த்துக்கள்...அழகான பெண்கள் அவனை தொடர்பு கொள்ளலாம், மச்சான் FREE யா தான் இருக்கார்.வினோத் யாருக்கும் தெரியாமல் இந்தியாவில் தனது பிறந்த நாளை  கொண்டாடிக்கொண்டு  இருபதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன...இதுவும் அவர்ட ஒரு சிறப்பம்சம் .



10/09/2009

கொள்ளைக் கோஸ்டி- பாகம் 1

இந்த கொள்ளை கோஸ்டி எண்டதும் ஞாபகம் வருவது அந்த கால MGR படங்கள் தான், ஒரு கொள்ளை கோஸ்டி இருக்கும் அதற்கு தலைவராக நம்பியார் இருப்பார், பல பொத்தான்களை அழுத்தும் கதவுகள் திறக்கப்பட்டு, தலைவர் ஒரு பாதாள அறையில் பல கலர் கலர் லைட்டுகளை போட்டு (வெசாக் கூடுகள் மாதிரி) காண்ட மிருகம் கொட்டாவி விட்டது போல தேவையே இல்லாம பயங்கரமா சிரிச்சு தன்னை வில்லன் என அடையாள படுத்தி கொள்வார்...
இது அந்தக்கால கொள்ளை கோஸ்டி ஸ்டைல், முக்கியமான விஷயம் இந்த கொள்ளை கோஷ்டியினர் ஒளிந்து வாழுவார்கள், ஆனால் இன்று நாம் காணும் கொள்ளையர்கள் எம் கண் முன்னே எவ்வளவு அழகாக வலம் வருகிறார்கள்.

இலங்காபுரியிலேகொள்ளை காரன் வெள்ளைக்காரன் போல் வாழ்கிறான், யார் இந்த கொள்ளைக்காரர்கள்????????????
படிப்படியாக ஒவ்வொரு கொள்ளைக்காரர்களாக பார்ப்போம்
மக்களுக்கு கண்முன்னே தெரியும் கொள்ளைகரர்களும் இருக்கிறார்கள், பல கண்முன்னே தெரியா மறைமுக கொள்ளைகாரர்களும் இருக்கிறார்கள்.முதலிலே கண்முன்னே பளிச்சென்று தெரியும் கொள்ளைக்காரகளில் முதலிடத்தில் இருப்பவர்கள் போக்குவரத்து போலீசார்.
இவர்கள் பகல் கொள்ளை மற்றும் இரவு நேரக்கொள்ளைகளில் கை தேர்ந்தவர்கள், பாரபட்சமின்றி துல்லியமாக செய்வார்கள். சாரதி அனுமதி பத்திரம், வாகனக் காப்புறுதி, வருடாந்த அனுமதி பத்திரம் என்பன இல்லாத போதோ அல்லது  காலாவதியான போதோ கொதித்தெழும் இவர்கள், கடுப்பின் உச்சத்துக்கு போவது போல் ஒரு நாடகத்தை முதலில் அரங்கேற்றுவர் பின்னர் பக்கத்துக்கு மதிலோரமாக அழைத்துச் சென்று கையை பிசைவர் தலையை சொறிவர், பிடிபட்டவன் இதனை விளங்கி கொண்டு ஒரு மயிலை (1000/=) வீசி எறிந்தால் சில அறிவுரைகளுடன் விட்டுவிடுவர்
மேலதிகாரிகளுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக பணக்கஷ்டத்தில், வருட அனுமதியோ காப்புறுதியோ எடுக்காத வாகன சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு உடனடித் தண்டப் பணத்தை இந்த வீணா போன தண்டங்கள் அறவிடும் கொடுரமும் நடைபெறும் ஆனால் சில தலைவர்களின்  மகன்கள் கார் ஓட வீதியைப் பூட்டி வைப்பார்.

இப்படியான நேரடி பகல் கொள்ளைகளில் ஈடுபடும் இவர்கள், இரவு நேரங்களில் இரா பிச்சைக்காரர்கள் போல் சில மரங்களுக்கு பின்னால் ஒளிந்திருந்து வீதியில் வாகன போக்குவரத்துக்கு குறைவாக இருப்பதால் தங்கள் பயணத்தை விரைவாக்க வேகமாக பயணிக்கும் சாரதிகளை மடக்கி வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதும் வழக்கம்.
இந்த சீருடை அணிந்த கொள்ளக்கரர்கள் தங்கள் கொள்ளைகளை செவ்வனே செய்கின்றார்கள்.
வரும் பதிவுகளில் அடுத்த கொள்ளைக்காரர்கள் வருவார்கள்.



9/28/2009

154 பஸ்சில் இசரா...... விசரா......

வெள்ளவத்தை மார்கெட்டுக்கு முன்னால இருக்கிற பஸ் ஹோல்ட் ல நான் 154 பஸ் எடுக்க காத்து கொண்டு இருந்தன், எங்கட campus கு ரெண்டு நாசமாப்போன பஸ் தான் போகும் அதில ஒன்று 155,இதில ஏறுற என்டா பாய் தலாணி எல்லாம் கொண்டு தான் போக வேணும். lecture தொடங்கிற ஒரு 15 நிமசத்துக்கு முதல்ல பல்லை ஒருக்கா
தேச்சு துப்பிட்டு பஸ்ஸ பிடிக்க ஓடி வருவன். அதே போல தான் ஒரு நாள்.. அந்த சம்பவம் நடந்தது.
அண்டைக்கு கொஞ்சம் வழமைக்கு மாறாக ஒரு ஊரே அந்த bus சுக்கு உள்ள நசுங்கி கொண்டு வந்தது வழமையா எல்லா கபோதிகளையும் உள்ளுக்குள்ள அனுப்பிட்டு, நான் படில நின்று காத்து வாங்கிட்டு வருவன்.இந்த வீனா போன கண்டக்டர் இசரா இசரா எண்டு காத்து கிழிய கத்தினான், நானும் போடா விசரா எண்டு நின்றன்.அவன் விடுற மாதிரி இல்ல, எப்பிடியாவது என்னை அந்த கூட்டத்துகுள்ள அனுப்பி பிரித்து எடுப்பம் எண்டு முடிவு எடுத்திட்டான்.நாய துரத்திற மாதிரி என்னை நடுவுகுள்ள அனுப்பிட்டான். அந்த கட்டைல போறவனுக்கு எல்லா கெட்ட வார்த்தைளையும் திட்டிட்டு, 30 நிமிச பயணத்த எப்படி கடத்தலாம் எண்டு நினச்ச படி அக்கம் பக்கம் பாத்தா, எல்லா figure ம் 20 marks கு குறைவா தான் இருந்துது எனக்கு ஏழரை சனி எண்டது சரிதான்.
சரி ஆபத்துக்கு பாவம் இல்ல, 20 marks figure ல ரெண்டை select பண்ணி எப்படி 40 marks கு improve பண்றது எண்டு ஒரு விஞ்ஞானி range ல சிந்தனை போய்கொண்டு இருக்க.இந்த விஞ்ஞான சிந்தனைக்கு இடைல உச்சக்கட்ட வியர்வைல பூசி வந்த cream எல்லாம் கரைந்து ஊத்துப்பட தொடங்கிட்டு, இந்த gapல ஒரு எரும மாடு என்னை உரசிர மாதிரியே ஒரு பீலிங்கு.... திரும்பினா பண்ணிகுட்டிகு பௌடர் அடிச்ச மாதிரி ஒருவன் பாத்தா கிட்னி திருடுறவன் மாதிரியே இருந்தான்.இது என்னடா புது வம்பா போச்சு எண்டு நினச்சிட்டு "ஆஹா அவனா நீ" என்ட வடிவேல் ட dialog க சொல்லிட்டு ஒரு step முன்னால move பண்ணினன்.அந்த டைம் பம்பலபிட்டி junction ல ஒரு கொடுமை..... இந்த ஊர் திருவிழா நேரம் பொங்கல் வாங்க அடிபடுற கூட்டம் மாதிரி ஒரு கூட்டம், எப்படியோ இடமே இல்லாத bus ல ஏறிட்டு என்ட கால எவனோ ஒரு மாடு ஏறி மிதிக்க, எவளவு நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது....என்னை சுத்தி வர தலையும் கையும் தான் தெரிது ஒரு குத்து மதிப்பா நான் நிக்கிறன். அதுக்குள்ள இந்த கண்டக்டர் விசரன் ஜன்னல்ல தொங்கி வந்து campus மல்லி தவ இசற யண்ட எண்டான்...கடுப்பு உச்சத்துக்கு ஏறிட்டு,கால கஷ்டம் என்னை சுத்தி ஒரு குளிக்காத group நிக்கிற மாதிரியே ஒரு கம கம எண்ட நாற்றம் சரி கொஞ்ச நேரம் தானே எண்டு நானும் பொறுமையா இருந்தன்.
பஸ் ல நின்ற படி என்னால ரோட்ட பாக்கவே முடியேல பஸ் கொஞ்சம் வேகமா போகுது எப்படியும் campus பயிண்ட எண்டு சொல்லுவான் தானே எண்டு காத்து கொண்டு இருந்தன், திடீர் எண்டு town hall பயிண்ட எண்டு அவன் சொல்ல, நானும் இங்க பார் இந்த வெங்காயம் campus ச town hall எண்டு சொல்லுது எண்டு நினச்ச படி துரித கதியில் ஒரு ஊடறுப்பு தாக்குதல் செய்து அந்த பாதுகாப்பு அரண்களை துளைத்துக்கொண்டு வெளிய வந்து சேர்ந்தன்.யாரோ campus இருந்த இடத்தில town hall ல வச்சிருகாங்க எண்டு மனம் ஜோசிக்க. கண்டக்டர் என்னை பார்த்து நீ campus எண்டு ticket எடுத்திட்டு town hall ல இறங்கிரியா? எண்டு என்னை பல figure கு முன்னால திட்டி விட்டு மேலும் நான்குரூபாவை பறித்து சென்றான். எண்ட shirt button ஒன்றையும் காணேல பிதா மகன் விக்கரம் மாதிரி ஆகீடன் ஒரு பத்து பேர் சேர்ந்து பந்தாடினமாதிரி ஒரு நினைப்பு.
இவளவு இழப்புக்கு பிறகும் 100rs குடுத்து auto ல campus போய் சேர்ந்தன்...

இறுதிப் புகலிடம்

கழுகுகள் வான் பரப்பில் வட்டமிட
சிதறிய தந்தையின் தசைகளை
சிறுக சேர்த்தபடி அந்த அப்பாவிச் சிறுவன்
செய்வதறியாது திகைத்து நிற்றல் ஆனான்

உடைந்த வீட்டில் தாயை தேடி
உரக கத்திய அவன்-அன்னையின்
கத்தி கண்டு அரை ஜீவன் தொலைத்தான்
ஒரு மகன் காணா கோலம் கானல் ஆனான்

தந்தையும் தாயும் கடலில் கரைய
கலங்கி நின்ற அவன், மூன்று நாளாய்
காணா அவன் அண்ணனை தேடி
அகிலம் முழுதும் அலையல் ஆனான்

உயிர் துறக்க தயாரான அவன்
உரிமைக்காய் உயிரை அர்ப்பணம் செய்து
தன் சாவை சரித்திரம் ஆக்க எண்ணி
புகலிடம் தேடி புரபடல் ஆனான்.

காதல் பிறந்த கதை

சூரியன் கடலுடன் காதல் கொள்ளும் அந்தி சாயும் பொழுதில், அந்த வழியில் பிரம்மன் வடித்த கால் முளைத்த கவிதையை கண்டு பிரம்மித்த விழிகளுடன் கோபுரங்கள் இல்லாமல் காதல் அலை வரிசை அவள் கண்களில் ததும்பி அவன் இதயத்தில் இடியென இறங்கிய அந்த கணம், அவன் விழிகளில் காதல் கருததரித்தது. சேர்ந்திருந்த உதடுகள் சேராமல் அவளிடம் ஆசை வார்த்தைகள் கூற ஆயத்தமானது, மங்கையின் விசித்திர பார்வை அவன் கண்களில் விழுந்து மூளை அணுக்களை துளைத்த நிலையில், சுற்றிய  நினைவுகள் பற்றிய உறவுகள் நினைவிழந்த நிலையில். அவளின் உதடுகள் பிரிந்து புதிதாய் பூத்த புது மலராய் சிந்திய புன்னகையில் சிதறிய நினைவுகளுடன் ஒரு அடி உயரத்தில் பறந்த அவன் சிட்டுக்குருவிகளும் பட்டாம் பூச்சிகளும் அவன் பாலைவன வாழ்வின் வசந்த வருகைகள் ஆக..ஆயிரம் பேர் நடமாடும் இடத்தில் அவள் தவிர ஏதும் தெரியா நிலையில் தன் நினைவுகளை தொலைத்த அவன்.அவனையே தேடி அவளின் பின்னால் தன் இதயம் சென்ற அந்த கணம் தன் காதல் பிறந்ததை உணர்ந்தான்.

தாலாட்டு கேட்காத தொட்டில்கள்


வயலொர வன்ப்பிலே அன்று
அவருக்கு அன்னமிட்ட கையுடன்
குழந்தை அழுகுரலில் ஒடி வந்து
என்னை தழுவிய அந்த தாயின்
சாம்பலும் கடலொடு கலந்து விட்டது
இன்று வயலும் இல்லை வனப்பும் இல்லை
இந்த ஆல மரத்திலே தொங்கும் நாங்கள்
தலாட்டு கேட்க்காதா தொட்டில்கள்


கலங்கரை தேடி....

நினைவுகள் சுமையுடன் ஆழ்கடல் நடுவே  
ஆர்பரிக்கும் என் மனக்கப்பல் 
காதலின் கலங்கரை தேடி
தொலைந்த பாதையில் இக்கணம்
நடு வானில் நட்சத்திரம் இல்லா
நடு நிசியில் சுழல் காற்றும்
சூறையாட காத்திருக்கும் 
கார் இருள் நொடியிலும் 
என்னை காதல் அலை காவு கொள்ள
காத்திருக்கும் கணப் பொழுதில்  
காதலும் நானும் ஒரே நாளில்  
இறுதி கிரியை செல்லும் இமைப் பொழுதில் 
இமை மூடி என்னவள் முகம் காணும்
இன்பத்திற்கு நிகரென உலகில் ஏதும் உண்டோ.





அட்டகாச ஆரம்பமும்கோ...

இது ஒரு புதிய அத்தியாயம் புரட்சியின் தொடக்கம் என்று சொல்ல ஆசை தான் ஏன்டா வீண் வம்பு என்று தொலைவில் ஒரு குரல் யாருடையது என்று தெரியவில்லை. சரி எது என்னவானாலும் கொஞ்சம் கலக்கலும் கொஞ்சம் அலசலும் என்று எனது பதிவை கொண்டு நகர்த்தலாம் என்ற எண்ணத்துடன் தொடங்குகிறேன் இதன் முடிவிடம் தெரியவில்லை பார்ப்போம். என்னகு முன் இமயமாக தெரியும் எத்தனையோ பதிவர்களுக்கு முன்னால் நானும் ஒரு சிறு குன்றாய் இணைகிறேன். கருத்துக்களின் சாட்டை அடி என்னக்கு காத்திருந்தாலும் (நாங்க வாங்காத அடியா) தூக்கு மேடை பஞ்சு மெத்தை எண்டு ஒரு பன்ச் சொல்லிடு போய்டே இருப்பம். மேதாவிகளின் மேலான ஒத்துழைப்புகளுக்கு காத்திருக்கிறேன்.

சினிமாக்களில் வரும் ஆரம்ப பாடல் போல் இது ஒரு தேவை இல்லாத build up ஆக இருக்கலாம் இருந்தும் மக்கள் ஏற்றுக்கொள்வதற்காக இப்படி ஒரு setup  எனது பணி தொடரும் அடுத்தவருக்கு அது பிணியாகமல் இருக்கும் வரை சந்தோசம்.

பின்னூட்டல்