9/28/2009

இறுதிப் புகலிடம்

கழுகுகள் வான் பரப்பில் வட்டமிட
சிதறிய தந்தையின் தசைகளை
சிறுக சேர்த்தபடி அந்த அப்பாவிச் சிறுவன்
செய்வதறியாது திகைத்து நிற்றல் ஆனான்

உடைந்த வீட்டில் தாயை தேடி
உரக கத்திய அவன்-அன்னையின்
கத்தி கண்டு அரை ஜீவன் தொலைத்தான்
ஒரு மகன் காணா கோலம் கானல் ஆனான்

தந்தையும் தாயும் கடலில் கரைய
கலங்கி நின்ற அவன், மூன்று நாளாய்
காணா அவன் அண்ணனை தேடி
அகிலம் முழுதும் அலையல் ஆனான்

உயிர் துறக்க தயாரான அவன்
உரிமைக்காய் உயிரை அர்ப்பணம் செய்து
தன் சாவை சரித்திரம் ஆக்க எண்ணி
புகலிடம் தேடி புரபடல் ஆனான்.

No comments:

பின்னூட்டல்