12/31/2009

தொலைந்தது 2009





2009 பாரிய அளவிலே அழிவுகளை ஏற்படுத்திய வருடம் அதிலும் குறிப்பாக தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு வருடம் என்றால் அது 2009 தான்...பல்வேறு விதங்களில் உயிர் இழப்புகளும் அழிவுகளும் கண்ணனுக்கு முன் அரங்கேறிய காலம்...2009 நமக்கு இழைத்த துன்பங்களே அதிகம் அதனால் தான் தொலைந்த்தது 2009 என்று தலைப்பிட்டேன்..


பல வித்தியாசமான அனுபவங்களை தாங்கி வந்த ஒரு குழப்ப கரமான ஆண்டு என்று  கூட கூறலாம்..எதோ ஒரு வகையில் யுத்தம் முடிவுக்கு வந்தது என்று அறிவித்தாலும் கூட இந்த ஆண்டில் யுத்த தாண்டவம் பாரிய அளவில் அரங்கேறி இருந்த்தது..

2009 எமக்கு விட்டு சென்ற பல கேள்விகளுக்கு விடை இந்த புது வருடத்தில் தான் கிடைக்க போகின்றது அதிலும் முக்கியமான கேள்வியாக  நான் கருதுவது.

சரத் பொன்சேகாவா மகிந்தவா அடுத்த ஜனாதிபதி?
இது தான் கடைசியாக 2009 எமக்கு விட்டு சென்ற முக்கியமான கேள்வி.. 

2009 எமக்கு அதிகளவான காயங்களைத் தந்து விட்டது, 2010 அந்த காயங்களுக்கு சரியான மருத்துவம் செய்யுமா பார்ப்போம்...

எனது வலைப்பதிவு நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..







12/23/2009

அட மூதேவி இது தேவையா..

வேட்டைக்காரனை புறக்கணிப்போம் என்று மூஞ்சி புத்தகத்தில் ஒரு குழு, என்ன கொடுமை.. அந்த குழு தொடங்கினதுக்கு போட்டிருக்காங்க ஒரு காரணம் ஆஹா நம்ம ஆக்கள் எங்கயோ போய்டாங்க...நான் விஜய் ரசிகன் அல்ல ஆனாலும் அந்த காரணத்தை பார்த்த போது கடுப்பின் உச்சத்துக்கு போயிட்டன், அதாவது குண்டு போட்டு அரை இலட்சம் மக்கள் இறப்பிற்கு காரணமாக இருந்த இராணுவத்தை புகழ்ந்து பாடிய இராஜ் வேட்டைக்காரன் பாடல்களுக்கு இசை உதவி செய்திருக்கின்றாராம் ஆகவே தமிழ் இனத்துக்கு விஜய் பெரிய துரோகம் செய்திடேராம்(ரூம் போட்டு ஜோசிபாங்கலோ) இந்த குழுவ தொடங்கின சிங்கம் லண்டன்ல இருக்கு என்பது தான் பெரிய காமெடி...
 தமிழன் எவளவு பெரிய துரோகம் எல்லாம் பாத்திட்டான், தமிழனுக்கு தமிழன் செய்த துரோகத்த விட இது ஒரு துரோகமா...லண்டன்ல இருக்கிற தம்பி உங்கட பொழுது போக்குக்கு தமிழர பிரச்சனைய பாவிச்சது போதும் இந்த அற்ப  விடயங்கள புறக்கணிச்சு என்னத்த காண போறீங்க..லண்டல அகதி அந்தஸ்து பெறுவதுக்கு யுத்தத்த கண்ணால காணாத பலரும் தாங்கள் யுத்தத்தால் பாதிகப்படவர்கள் என்று நாய் கடித்த காயத்தை குண்டடி பட்ட காயம் என்று கூறிய வரலாறுகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் முதலில் அவங்களை புறக்கனிங்கோ அதுக்கு பிறகு மற்றவர்களை புறக்கணிக்கலாம்.. புறக்கணிச்ச தம்பி, பாடல்களுக்கு இசை வழங்குவது இராஜ்சின் தொழில் என்பதை நீங்க கவனிக்க வேண்டும்,நடிப்பது விஜயின் தொழில் அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்...விஜய் யார்? அவரிடம் தமிழர் பிரச்சனைக்கு என்னத்தை எதிர் பார்க்க முடியும்..ஈழம் என்று ஒரு நாடு உருவானால் கூட வெளிநாட்டில் இருக்கும் பலர் இங்கு வரப் போவதில்லை இப்படியோ கதைச்சு காலத்தை ஓட்டுங்கோ(இது சகலருக்கும் பொருந்தாது)...

இப்படி பாக்க போனால் அரை இலட்சம் பேரை கொன்ற மஹிந்த அரசுக்கு கீழ் இருக்கும் இலவச வைத்தியசாலை பாடசாலை போன்றவற்றையும் லண்டன் தம்பி புறகணிக்க சொலுவார் போல இருக்கு, லண்டன் தம்பி, புறக்கணிப்பு என்பதை கேவல படுத்தாதீர்கள், முகாமில் இருந்த மக்கள் பசி என்று வந்தவுடன் இராணுவத்திடம் கையேந்தி நின்றார்கள் அதை தவறு என்று கூறுவீர்களா அல்லது புறக்கணிக்க சொல்லுவீரா...எதாவது பிரியோசனமா ஜோசீங்க,மஹிந்த அரசில் இருக்கும் தமிழ் அமைச்சர்களின் காலில் விழுந்து தங்கள் சிறையில் இருக்கும் பிள்ளைகளை விடுவிக்க எத்தனையோ பெற்றோர் தினமும் போகின்றனர் அவர்களை புறக்கணிக்க முடியுமா? பாதிக்க பட்டவர்கள் வலியின் உச்சத்தில் இருக்கிறார்கள் கொஞ்ச காலம் ஆவது அவர்கள் நிம்மதியாக  இருக்கட்டும்.நீங்கள் யாரையும் புறக்கணிக்க வேண்டாம் அப்படி புறக்கணிக்க விரும்பினால் இலங்கைக்கு வந்து புறக்கணியுங்கள்...சொடுக்கி இணைக்க http://www.facebook.com/group.php?gid=197350762271



12/15/2009

விசித்திர வினோத்துக்கு இன்று பிறந்த நாள்..

மகேஸ்வரன் வினோத் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம். இந்த நல்ல நாளில் யார் இந்த வினோத் இவன் பின்னணி என்ன?நான் இவனை முதல் முதலாக 09/10/2006 அன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன் சும்மா சொல்ல கூடாது மெல்லிய பெடியன் எண்டாலும் அட்டகாசமான ஸ்டைல், தலைக்கு ஜெல் வைத்து ஒரு விதமாக தான் நின்றான்,நானும் இவனோட கதைப்பம் எண்டு பல முறை try பண்ணியும் முதலாவது நாள் கதைக்க முடியேல..பிறகு உறவு பாலத்தில் தண்ட திறமையால அக்கா மாரின் விருப்பத்துக்குரிய தம்பியா மாறினான். வீனா போனவன் ஓவரு நாளும் சரியாய் காலைல உறவு பாலத்துக்கு வந்திருவான் இப்படி காலங்கள் போக charted ல அத்திவாரம் எண்டு தொடங்கினவன் மள மள எண்டு F1 வரையும் போய் சாதனை படைத்தான் எங்கட Batch  ல முதலாவது வேலைக்கு போனது இவன்தான்...படிப்பில் கொடி கட்டி பறந்த இவன் கடலை போடுவதிலும் குறைந்தவன் அல்ல, சில  சிங்கள பெட்டைகளுக்கு இவன் போட்ட கடலைகள் பிடித்து போய் அனே வினோத், அனே வினோத் எண்டு இவனோட கொஞ்ச காலம் திரிய அதுகளுக்கும் லவ் SET ஆக இவனுக்கு கடலை போட பெரிதா விருப்பம் இல்லாமல் போனது....Hindu union ல சேர்ந்து  பாடுபட்டு உழைத்தது இவனது பெரிய சாதனை, அணைத்து கலை நிகழ்ச்சிகளிலும் இவனது பெரும் பங்கு இருந்து வந்தது..இடையில் ஓரிரு தடவை நடனங்கள் வேறு ஆடி ஒரு மாபெரும் கொடுமை செய்தான். நான் போடும் மொக்கை நாடகங்களுக்கு பக்க பலமாக நின்று உழைப்பான் அதுகளுக்கு Animation  வேற செய்து வருவான்..எங்கட Batch IT king இவன்தான் பல நல்ல குணங்கள் இருந்தாலும் பஸ் ல ஏறினா ஒரு 10 ரூபாய குடுத்து தனக்கு மட்டும் டிக்கெட் எடுப்பான்.5 ரூபாய் ஜெல் பக்கெட் வாங்கி அதை 10 நாள் use பண்ற  technique இவண்ட தான் படிகொனும். பெரிய கொடுமை இவன் 50rs reload  பண்ணி 2மாதம் phone பாவிப்பான், Dialog sim use பண்ணி ஒரு வருசத்தில வெறும் 5 star points எடுத்த ஒரே ஆள் இவன்தான் ,உடுப்பு எடுக்க போனா சும்மாவாவது ஒரு பத்து கடை ஏறி இறங்குவான்...இவனை கஞ்சன் எண்டு ஒதுக்கி விட முடியாது, இன்று நான் இவளவு அழகா Guitar வாசிக்கிறன் அதுக்கு காரணம், வினோத் எனக்கு தந்த Guitar தான். இவனுக்கு பிடிக்காதது தமிழன் வைக்கும் மீசை, பிடித்தது செட்டிநாட்டு தோசை.வெள்ளிகிழமைகளில் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலில் வெளியில் கழட்டி விட்டு வந்த செருப்பு துலைய கூடாது எண்டு கும்பிடுவான்.பஸ் காசை சேமிக்க கோவில்ல இருந்து வீடு வரை நடந்து போவான்.எப்படியோ யாருக்கும் சொல்லாமல் ரகசியமா பல plan கள் போடுவான்...மொத்தத்தில் வினோத், மகேஸ்வரனால் இந்த உலகத்துக்கு தரப்பட்ட ஒரு அரிய சொத்து. அவனது சாதனைகள் தொடர  வாழ்த்துக்கள்...அழகான பெண்கள் அவனை தொடர்பு கொள்ளலாம், மச்சான் FREE யா தான் இருக்கார்.வினோத் யாருக்கும் தெரியாமல் இந்தியாவில் தனது பிறந்த நாளை  கொண்டாடிக்கொண்டு  இருபதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன...இதுவும் அவர்ட ஒரு சிறப்பம்சம் .



பின்னூட்டல்