10/27/2010

கருங்கல்லை போன்றவன் நான் கற்பூரம் ஆகிவிட்டேன்.

நம்ம பசங்க எல்லாம் கிட்டத்தட்ட pass out ஆனா நிலைமைல வேலை தேடும் படலத்தில் மும்முரமாக ஈடுபடும் வேளையில்..சிலர் நல்ல வேலைகள் கிடைச்சு செட்டில் ஆகிடாங்க, அது அடுத்த பதிவில் வரும், இம்முறை ஒரு அதிசய நிகழ்வு பற்றிய உண்மை கதை,

நேற்றைய தினம் வினோத் வழமை போல் வேலை முடிந்து அழகான பெண்களை அங்கும் இங்கும் தேடி அலைந்து இறுதியாக BMICH இல் முதலீட்டு தின கண்காட்சி (investment day டிலீப் போன்ற தமிழ் விளங்காதவரகளுக்காக)  நடப்பதை அறிந்த வினோத், கடந்த வெள்ளிகிழமை பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து எடுத்த இரண்டு ரூபாவை முதலீடு செய்யும் ஒரு நல்ல நோக்கத்துடன் உள்ளே சென்றான்...உள்ளே போன வினோத்  சிரேஷ்டர்கள் சிலரை முதலீட்டு ஆலோசகர்களாக கண்டான்.
அதிலும் குறிப்பாக சிவா அண்ணாவை பார்த்தபோது அவர் முற்று முழுதாக தமிழை மறந்து இங்கிலீஷ்காரனாக மாறி இருபது வினோத்துக்கு தெரிய வந்தது,இது பற்றி சிவா அண்ணாவின் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு நண்பரிடம் விசாரித்த போது சந்திரமுகி படம் போல் ஒரு கதை கூறினான் அதாவது 2005/2006 பகுதியில் பீட்டர் என்று ஒரு வெள்ளைக்காரன் சிவா அண்ணாவின் வீட்டுக்கு அருகாமையில் இருந்ததாகவும், தான் கருப்பாக இருந்ததால் அந்த வெள்ளைகாரனாக மாறவேண்டும் என்றும் ஆசை கொண்ட சிவா அண்ணா பீட்டர் போல் ஆங்கிலத்தில் பீட்டர்விட்டுதிரிந்தார் கடந்த வருடம் பீட்டர் இறந்த பின் அந்த பீட்டர் தான் தான் என எண்ணி தற்பொழுது முழுமையாக பீட்டராக மாறி இருக்கும் சிவா அண்ணாவின் கதை இது....இது ஒரு புறம் இருக்க, இரண்டு ரூபாவுடன் BMICH வலம் வந்த   வினோத் பெரும் அதிர்ச்சி  ஒன்றை சந்திக்க நேர்ந்தது,
குறிப்பிட ஒரு இடத்தில ஏழு அடி உயரமுள்ள ஒரு நபர் பங்கு சந்தையில் தங்களுக்கூடாக முதலீடு செய்வது தொடர்பாக தாறுமாறாக ஆலோசனை வழங்கி கொண்டிருப்பதை பார்த்த வினோத் தனது  இரண்டு ரூபாவை எடுத்துக்கொண்டு அங்கெ சென்றான், அங்கு நிறத்து வேறுயாருமல்ல நம்ம கார்த்தி தான், ஒரு காலத்தில் பாட்ஷா போல் ஊரை கலக்கிய கார்த்தி இன்று மாணிக்கம் போல் மாறி இருப்பதாய் கண்டு வினோத்துக்கு அஞ்சும் கேட்டு அறிவும் கெட்டது..வெட்டு குத்துகளுக்கு ஆலோசனை வழங்கிய கார்த்தி இன்று முதலீட்டு ஆலோசகராக இருக்கும் விடயம் எங்களுக்கு தெரிந்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த பதிவு எழுதப்பட்டது மேலும் இதை பார்த்து மட்டக்குளி தாதாவான அசோக் திருந்த வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு..நண்பன் கார்த்தி இதை பார்த்து கடுப்பாகும் பட்சத்தில் நேரடியாக வினோத்தின் வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுகொள்கிறோம்.(அப்பாடி.....) மேலும் வினோத் தந்த இரண்டு படங்களையும் இங்கு கிளுகிளுப்பாக இனைகிறோம்..



No comments:

பின்னூட்டல்