நான் பார்த்த சிறந்த Marketer அதாவது சந்தைபடுதுபவர் மஹிந்த தான்..இவர் போட்டோ எடுத்த காசை மிச்ச படுத்தி இருந்தால் விண்வெளிக்கு ரொக்கட் அனுப்பி இருக்கலாம்..
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தன்னை மக்கள் மத்தியில் position பண்ணுவதற்காக அட்டகாசமான பல போஸ்களில் ஏராளமான படங்களை எடுத்து தள்ளி இருந்தார். முன்னால் நடிகர் என்பதால் இப்படியான போஸ்கள் குடுப்பது அவருக்கு பெரிய வேலை இல்லை.
வயதான கிழவிகளும், குழந்தைகளும் இவரைக் கண்டால் பயந்து ஓடும் அளவிற்கு அவர்களை இவர் விடுவதில்லை..
உச்சகட்ட கொடுமையாக ஆயிரம் ரூபா தாளில் ஜேசு நாதர் ஆசீர்வாதம் வழங்குவது போல் ஓர் போட்டோ போட்டிருந்தார் உலகிலே முதல் முறையாக இப்படியான வரலாற்று சாதனையை செய்த சிங்கம் இவர் தான்.
கொழும்பு நகரில் எங்கு திரும்பினாலும் தனது திருமுகத்தையே மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக மலசலகூட சிவர்களைக் கூட இவர் விட்டு வைப்பதில்லை..தன் திரு முகத்தை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து எங்கும் ஓட்டுவது தான் மஹிந்த சிந்தனையின் சாராம்சம்,
புகைப்படங்களில் தானும் தம்பியும் கட்டி அணைத்து முத்தமிடும் ஒரு கிளுகிளுப்பான படமும் முக்கியம் பெறுகின்றது..
இதன் விளைவாக தற்பொழுது கொழும்பு வாழ் மக்கள் இரவு வேளைகளில் சிவப்பு துண்டுடன் பெரிய மீசை வைத்த உருவம் கனவில் வந்து பயமுறுத்துவதாக வைத்தியசாலை சென்று தெரிவித்துள்ளனர், இது மகி போஸ்டர் போமியா எனும் பயங்கர நோய் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதற்கு மேலதிகமாக தனது சந்தைபடுத்தல் திறமையை காட்டுவதற்காக தனது காந்தர்வ குரலால் வீடு வீடாக தொலைபேசியில் பிச்சை எடுக்கிறாராம், பிறகு புது வருடத்திற்கு அனைவர்க்கும் SMS வாழ்த்து, இதையும் தாண்டி FACEBOOK மற்றும் YOUTUBEகளில் முன்முருவல் பூத்த சிரிப்புடன் விளம்பரங்கள்..இவளவு காசும் எங்க(எங்கள்ட) இருந்து தான் வருதோ.