12/31/2009

தொலைந்தது 2009





2009 பாரிய அளவிலே அழிவுகளை ஏற்படுத்திய வருடம் அதிலும் குறிப்பாக தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு வருடம் என்றால் அது 2009 தான்...பல்வேறு விதங்களில் உயிர் இழப்புகளும் அழிவுகளும் கண்ணனுக்கு முன் அரங்கேறிய காலம்...2009 நமக்கு இழைத்த துன்பங்களே அதிகம் அதனால் தான் தொலைந்த்தது 2009 என்று தலைப்பிட்டேன்..


பல வித்தியாசமான அனுபவங்களை தாங்கி வந்த ஒரு குழப்ப கரமான ஆண்டு என்று  கூட கூறலாம்..எதோ ஒரு வகையில் யுத்தம் முடிவுக்கு வந்தது என்று அறிவித்தாலும் கூட இந்த ஆண்டில் யுத்த தாண்டவம் பாரிய அளவில் அரங்கேறி இருந்த்தது..

2009 எமக்கு விட்டு சென்ற பல கேள்விகளுக்கு விடை இந்த புது வருடத்தில் தான் கிடைக்க போகின்றது அதிலும் முக்கியமான கேள்வியாக  நான் கருதுவது.

சரத் பொன்சேகாவா மகிந்தவா அடுத்த ஜனாதிபதி?
இது தான் கடைசியாக 2009 எமக்கு விட்டு சென்ற முக்கியமான கேள்வி.. 

2009 எமக்கு அதிகளவான காயங்களைத் தந்து விட்டது, 2010 அந்த காயங்களுக்கு சரியான மருத்துவம் செய்யுமா பார்ப்போம்...

எனது வலைப்பதிவு நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..







No comments:

பின்னூட்டல்