12/23/2009

அட மூதேவி இது தேவையா..

வேட்டைக்காரனை புறக்கணிப்போம் என்று மூஞ்சி புத்தகத்தில் ஒரு குழு, என்ன கொடுமை.. அந்த குழு தொடங்கினதுக்கு போட்டிருக்காங்க ஒரு காரணம் ஆஹா நம்ம ஆக்கள் எங்கயோ போய்டாங்க...நான் விஜய் ரசிகன் அல்ல ஆனாலும் அந்த காரணத்தை பார்த்த போது கடுப்பின் உச்சத்துக்கு போயிட்டன், அதாவது குண்டு போட்டு அரை இலட்சம் மக்கள் இறப்பிற்கு காரணமாக இருந்த இராணுவத்தை புகழ்ந்து பாடிய இராஜ் வேட்டைக்காரன் பாடல்களுக்கு இசை உதவி செய்திருக்கின்றாராம் ஆகவே தமிழ் இனத்துக்கு விஜய் பெரிய துரோகம் செய்திடேராம்(ரூம் போட்டு ஜோசிபாங்கலோ) இந்த குழுவ தொடங்கின சிங்கம் லண்டன்ல இருக்கு என்பது தான் பெரிய காமெடி...
 தமிழன் எவளவு பெரிய துரோகம் எல்லாம் பாத்திட்டான், தமிழனுக்கு தமிழன் செய்த துரோகத்த விட இது ஒரு துரோகமா...லண்டன்ல இருக்கிற தம்பி உங்கட பொழுது போக்குக்கு தமிழர பிரச்சனைய பாவிச்சது போதும் இந்த அற்ப  விடயங்கள புறக்கணிச்சு என்னத்த காண போறீங்க..லண்டல அகதி அந்தஸ்து பெறுவதுக்கு யுத்தத்த கண்ணால காணாத பலரும் தாங்கள் யுத்தத்தால் பாதிகப்படவர்கள் என்று நாய் கடித்த காயத்தை குண்டடி பட்ட காயம் என்று கூறிய வரலாறுகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் முதலில் அவங்களை புறக்கனிங்கோ அதுக்கு பிறகு மற்றவர்களை புறக்கணிக்கலாம்.. புறக்கணிச்ச தம்பி, பாடல்களுக்கு இசை வழங்குவது இராஜ்சின் தொழில் என்பதை நீங்க கவனிக்க வேண்டும்,நடிப்பது விஜயின் தொழில் அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்...விஜய் யார்? அவரிடம் தமிழர் பிரச்சனைக்கு என்னத்தை எதிர் பார்க்க முடியும்..ஈழம் என்று ஒரு நாடு உருவானால் கூட வெளிநாட்டில் இருக்கும் பலர் இங்கு வரப் போவதில்லை இப்படியோ கதைச்சு காலத்தை ஓட்டுங்கோ(இது சகலருக்கும் பொருந்தாது)...

இப்படி பாக்க போனால் அரை இலட்சம் பேரை கொன்ற மஹிந்த அரசுக்கு கீழ் இருக்கும் இலவச வைத்தியசாலை பாடசாலை போன்றவற்றையும் லண்டன் தம்பி புறகணிக்க சொலுவார் போல இருக்கு, லண்டன் தம்பி, புறக்கணிப்பு என்பதை கேவல படுத்தாதீர்கள், முகாமில் இருந்த மக்கள் பசி என்று வந்தவுடன் இராணுவத்திடம் கையேந்தி நின்றார்கள் அதை தவறு என்று கூறுவீர்களா அல்லது புறக்கணிக்க சொல்லுவீரா...எதாவது பிரியோசனமா ஜோசீங்க,மஹிந்த அரசில் இருக்கும் தமிழ் அமைச்சர்களின் காலில் விழுந்து தங்கள் சிறையில் இருக்கும் பிள்ளைகளை விடுவிக்க எத்தனையோ பெற்றோர் தினமும் போகின்றனர் அவர்களை புறக்கணிக்க முடியுமா? பாதிக்க பட்டவர்கள் வலியின் உச்சத்தில் இருக்கிறார்கள் கொஞ்ச காலம் ஆவது அவர்கள் நிம்மதியாக  இருக்கட்டும்.நீங்கள் யாரையும் புறக்கணிக்க வேண்டாம் அப்படி புறக்கணிக்க விரும்பினால் இலங்கைக்கு வந்து புறக்கணியுங்கள்...சொடுக்கி இணைக்க http://www.facebook.com/group.php?gid=197350762271



4 comments:

vaseeharan said...

rajeev sariyaa sonnai machan.... Enakum intha visayam kadupai kilapinathu than... gud....
Silar itha vaichu anga arasiyal panna paakinam... Engada sanangalum nambitu iruku... uk la irunthu oru sonthakaarar kathaichavae... veeta phone ellam pani Boycott panna sollurangalam.... innoru paasayila sonna MIRATURANGALAM.... parka pona nadakuranthae vera endru..... Enna kodumai sir ithu...

ரஜீவ் said...

கொடுமையிலும் கொடுமை வசி!!!!!

அடிமை நாட்டில் ஓர் தீவிரவாதி said...

thanks machan

Thanu said...

சரியாய் சொன்னிங்க....

பின்னூட்டல்