9/28/2009

கலங்கரை தேடி....

நினைவுகள் சுமையுடன் ஆழ்கடல் நடுவே  
ஆர்பரிக்கும் என் மனக்கப்பல் 
காதலின் கலங்கரை தேடி
தொலைந்த பாதையில் இக்கணம்
நடு வானில் நட்சத்திரம் இல்லா
நடு நிசியில் சுழல் காற்றும்
சூறையாட காத்திருக்கும் 
கார் இருள் நொடியிலும் 
என்னை காதல் அலை காவு கொள்ள
காத்திருக்கும் கணப் பொழுதில்  
காதலும் நானும் ஒரே நாளில்  
இறுதி கிரியை செல்லும் இமைப் பொழுதில் 
இமை மூடி என்னவள் முகம் காணும்
இன்பத்திற்கு நிகரென உலகில் ஏதும் உண்டோ.





No comments:

பின்னூட்டல்